அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!- அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை!

அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

அ.இ.அ.தி.மு.க.வின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை, கூடுதல் பொறுப்பாக முக்கூர் என். சுப்பிரமணியம் கவனிப்பார் என்றும் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தற்போது தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-கோ.லெட்சுமிநாராயணன்.