மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடன் வழங்கும் முகாம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் முகமாக வங்கிகளில் இருந்து நேரடிக்கடன் பெற்று தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் வங்கி நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி எளிதில் கடனுதவி கிடைக்கச்செய்யவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓவ்வொரு ஊராட்சி ஓன்றியங்களிலும் கீழ்க்காணும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேற்படி முகாமில் வங்கியாளர்கள் கலந்து கொண்டு சுய உதவிக் குழுக்களின் தகுதிக்கு தக்கவாறு நேரடி கடன்களை அனுமதிக்க உள்ளனர்.

தகுதியுள்ள சுயஉதவிக்குழுவினர் அனைவரும் குறிப்பிட்டுள்ள தேதிகளில் நடைபெறும் கடன் வழங்கும் முகாம்களில் சம்மந்தப்பட்ட குழு ஊக்குனர் மற்றும் பிரதிநிதி; நேரில் ஆஜராக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

01.10.2014 அன்று தூத்துக்குடி, கருங்குளம் ஆகிய வட்டாரங்களிலும், 06.10.2014 அன்று திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, உடன்குடி ஆகிய வட்டாரங்களிலும், 07.10.2014 அன்று திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய வட்டாரங்களிலும், 08.10.2014அன்று கோவில்பட்டி, கயத்தார் ஆகிய வட்டாரங்களிலும், 09.10.2014 அன்று ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய வட்டாரங்களிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைத்து பிற்பகல் 1.00 மணிக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்மேளா நடைபெறவுள்ளது.

மேற்காணும் முகாமில் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் தீர்மான புத்தகம், கடன்பேரேடு, தனிநபர் கடன் சேமிப்பு பதிவேடு, ரொக்கப்புத்தகம், பொதுப்பேரேடு, வங்கி சேமிப்புப்புத்தகம் ஆகிய பதிவேடுகளோடு முகாமில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களும் நேரடி கடனுதவி பெற்று பயன் அடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

-பி.கணேசன் @ இசக்கி.