சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தரச்சான்றிதழ் அறிமுக நிகழ்ச்சி!

Photo0113 Photo0126சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தரச்சான்றிதழ் படிப்பு குறித்த அறிமுக நிகழ்ச்சி தூத்துக்குடி வரதராஜபுரம் ராசி திருமண மண்டபத்தில் இன்று (29.07.2014) நடைபெற்றது. தூத்துக்குடி ஸ்ரீ மரகதசேஷாத்ரி இசைப்பள்ளியின் நிர்வாகி மாரி வரவேற்புரை வழங்கினார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறைப் பேராசிரியர் குமார் மற்றும் நாட்டியத்துறைப் பேராசிரியர் கிருஷ்ணராஜு ஆகியோர் கலந்து கொண்டு தரச்சான்றிதழ் படிப்பு குறித்து சிறப்புரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவ,மாணவிகள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

-பொ.கணேசன் @ இசக்கி.