பாலியல் குற்றச்சாட்டு: பௌத்த பிக்குக்கு 70 வருட சிறைத்தண்டனை! – இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

pudha1
இலங்கையில் சிறுவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பௌத்த பிக்கு ஒருவருக்கு 70 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிலாபம் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது.

குற்றம் சுமத்தப்பட்ட பிக்கு தாம் வறுமை காரணமாகவே தமது தாயால் பிக்குவாக மாற்றப்பட்டதாகவும், அப்போதுதான் பாலியல் துஸ்பிரயோகங்களை மேற்கொள்வற்கு பழக்கப்படுத்தப்பட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இவரால் நான்கு சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு 4 லட்ச ரூபாவை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் பிக்குவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களை கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பௌத்த பிக்குகள் பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுவது, சமீபக் காலமாக இலங்கையில் அதிகரித்து வருகிறது. 

pudhaகடந்த ஆண்டு புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடு ஒன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது, கையும், களவுமாக போலிசாரிடம் பிடிப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பௌத்த பிக்குகளை கண்டாலே மக்கள் பதறியடித்து ஓடுகிறார்கள்.

எஸ்.சதிஸ்சர்மா.