அனுமதி கேட்டது ஆர்ப்பாட்டத்திற்கு! நடந்தது சாலைமறியல்! -குளித்தலையில் நடந்த குழப்பம்!  

CYMERA_20140701_122805

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்யவதற்கு தேவேந்திரக் குலத்தை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் அனுமதி கேட்டு இருந்தனர். காவல் துறையும் அனுமதி வழங்கியது.

அதன்படி இன்று (01.07.2014) மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்தவர்கள், திடீரென சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் சில நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனே, குளித்தலை காவல் துறையினர் தலையிட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால், அப்படி இருந்தும் ஒரு பேருந்தின் கண்ணாடியை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து உடைத்தனர். இதனால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

-பன்னீர்.