மு.க.அழகிரி வீட்டில் வைகோ!

vaiko-azakiri-

இன்று (23.03.2014) மதுரையில்  மு.க.அழகிரியை அவரது வீட்டில் வைகோ சந்தித்தார். இது குறித்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இன்று (23.03.2014) நடைபெற்ற மு.க.அழகிரி இளைஞர் பாசறைத் தலைவர் தமிழ்செல்வகுமார் மகள் கலைசேனா காதுகுத்து விழாவில் மு.க.அழகிரி கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்ததாவது:

alagirialagiri 1

மதுரையில் வைகோ என்னைச் சந்தித்தார். நாங்கள் பழைய விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் பேசினோம். பேசி முடித்துப் புறப்படும்போது எனக்கு ஆதரவு கொடுங்கள் என வைகோ கேட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு கேட்டனர். ஆனால், தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து கூறுவதாகத் தெரிவித்தேன். முதலில் கட்சியையும் தலைவரையும் காக்க வேண்டும். பின்னர் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பேன் என்றார்.

-இரா.அருண்கேசவன்