இலங்கை நெடுந்தீவை அபகரித்து 45 கோடி செலவில் ஆடம்பர ஹோட்டல்! இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸ திட்டம்

namal_needutheevu.jpg1

நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை Delft என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. நெடுந்தீவு தலைத் தீவு, பசுத்தீவு, பால்தீவு, அபிசேகத் தீவு, தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது. யாழ் குடாநாட்டில் இருந்து நெடுந்தொலைவில் இருப்பதனால் இத்தீவு நெடுந்தீவு என்று பெயர் பெற்றது.

இலங்கை இராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து பெரும்பாலன மக்கள் யாழ்ப்பாணதிற்கும், வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்து விட்டார்கள். இன்று இங்கு பொருளாதார வசதிகள் இல்லாத தமிழ் மீனவ சமூகத்தை சாந்த 2500 இருந்து 3000 மக்கள் கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். கல்வி, மருத்துவம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இவர்களுக்கு இங்கு கிடைப்பதில்லை.

தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட இத்தீவு விவசாயம், கால்நடை, கடல் வளங்களுடன் உள்ளது. 1813-ம் ஆண்டு நெடுந்தீவு கடலில் இருந்து புறப்பட்ட ஹீர்த் டீ போலோ (hearth De Polo) எனும் ஐக்கிய அமெரிக்க இளைஞன் இத்தீவின் அழகையும், வளங்களையும் மனதில் கொண்டு இது தனி ஒரு நாட்டுக்கு சொந்தமானதல்ல! இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானது என்கிறான்.

நெடுந்தீவின் வளங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை. நெல் சிறுதானிய பயிர்களும் கோதுமை வயல்களுடன் சணல், பெருக்கு, பாலை, பனை, தென்னை, மூலிகை செடி கொடிகளுடன் கடலும் கடல் சார்த்த இடமுமான இந்த நெய்தல் நிலத்தில் பாலும் மோரும் பாய்ந்தோடிய வரலாறுகள் பல. மருந்து மாமலை வனம் என இத்தீவினை போற்றி பெருமிதம் கொண்டார் மன்னன் செகராசசேகரன்.

போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். அமைச்சர்கள், படைவீரர்களுடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடியரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகிறது.

kottaiயாழ்ப்பாணத்திலிருந்து நெடுந்தீவு 45 கிலோமீட்டர் தூரம் ஆகும். ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே. புங்குடுதீவில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

நெடுந்தீவு வடக்குத் தெற்காக 6 கிலோமீட்டர் அகலத்தையும், கிழக்கு மேற்காக 8 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்ட ஒரு சரிந்த இணைகர வடிவில் 30 கிமீ சுற்றளவையும், 48 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ளது.

needutheevu.jpgmapநெடுந்தீவு மக்கள் பண்டைய காலத்தில் தென்னிந்தியாவுக்குச் செல்வதற்கு பெரியதுறை என அழைக்கப்பட்ட துறைமுகத்தைப் பயன்படுத்தினர். இங்கிருந்து மக்கள் படகுகளில் யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, புங்குடுதீவு ஆகிய இடங்களுக்கும் பயணம் செய்தனர். இது நெடுந்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இதனைவிட மாவிலித் துறைமுகம், கிழக்கே கிழக்குத்துறை, வடக்கே தாளைத்துறை, குடுவிலித்துறை, தெற்கே குவிந்தாதுறை, வெல்லாதுறை ஆகிய துறைமுகங்களும் உள்ளன. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பெரியதுறையிலிருந்து எவரும் இந்தியாவிற்கு செல்லாதபடி தடைவிதிக்கப்பட்டிருந்தது. இத்துறைமுகத்தை கைப்பற்றுவது தொடர்பாக வெடியரசனுக்கும், மீகாமனுக்கு சண்டை நடந்ததாக வரலாறு கூறுகிறது.

needutheevuநெடுந்தீவு கட்டைக்குதிரைகளுக்குப் பேர் பெற்றது. இவை தன்னிச்சையாக நெடுந்தீவு வெளிகளில் மேய்ந்து திரிகின்றன. இங்குள்ள குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 1660-ம் ஆண்டு முதல் 1675-ம் ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுநராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார். 19-ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன. இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.

needutheevu.jpgtreeநெடுந்தீவில் உள்ள பெருக்கு மரம் வரலாற்றுப் புகழ் மிக்கது. இது நூற்றாண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது. இம்மரத்தில் உள்ள துளை வழியே உள்ளே சென்றால் அங்கே குகை ஒன்று உள்ளது. இங்கு ஒரு குடும்பம் நிற்கக்கூடிய இட வசதி உள்ளது இதன் சிறப்பாகும்.

இப்படி வரலாற்று சிறப்பும், இயற்கை அழகும், வளமும் மிக்க நெடுந்தீவுப் பகுதியில் நட்சத்திர அந்தஸ்திலான ஹோட்டல் ஒன்றினை அமைக்க இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஸவின் மகனும், இலங்கை தென் மாகாணத்தில் அமைந்துள்ள அம்பாந்தோட்டை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தயாராகியுள்ளார். இதற்கு சுமார் 450 மில்லியனை (இந்திய ரூபாய் மதிப்பு 45 கோடி) அவர் ஒதுக்கியிருக்கிறார். நீச்சல் குளம், திருமணமண்டபம் மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன் அந்த ஆடம்பர ஹோட்டல் கட்டப்படவுள்ளது. கடல்வழி தொடர்பு மட்டுமே கொண்ட நெடுந்தீவிற்கு சுற்றுலாப் பயணிகள் வந்து சேருவதற்கு சிறிய அளவிலான ஓடுபாதையுடன் விமான நிலையம் ஒன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த ஹோட்டலைச் சுற்றி நூறு வீடுகளும் நிர்மாணிக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இக்கட்டுமானப் பணிகளை பிரபல ஒப்பந்த நிறுவனமான மகா நிறுவனம் மேற்கொள்ளுமென தெரிகின்றது.

இத்திட்டங்களை முன்னெடுக்க இலங்கையின் முன்னணி கட்டடக்கலைஞர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கை விமானப்படை விமானம் மூலம் நெடுந்தீவினை சுற்றிப்பார்வையிட்டுள்ளனர். அத்துடன் கடற்படை அதிவேகப்படகுகளும், இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்த பூர்வீக மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வருகின்ற நிலையில்  அங்கு நில அபகரிப்புகள் ஆரம்பமாகியுள்ளன.