இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஷபட்சேவை காப்பாற்ற தம்பி பசில் ராஜபகஷ மக்களிடம் வேண்டுகோள்!

பசில் ராஜபகஷ

பசில் ராஜபகஷ

இலங்கையை காப்பாற்றிய ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை உங்களால் மட்டுமே தடுக்க முடியும். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை மக்கள் வழங்கினால், அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக செயற்பட முடியாது.

ஜனநாயக நாட்டில் மக்கள் ஜனாதிபதியுடன் இருக்கும் போது அவருக்கு எதிராக எந்த நாடும் நடவடிக்கைகளை எடுக்க விரும்புவதில்லை. இதனால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்திலும் வெளிநாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட போவதில்லை.

எனவே, இலங்கையை காப்பாற்றிய ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை தடுப்பதற்காக, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மை பலத்தை வழங்குமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஷபட்சேவின் தம்பியும்,  இலங்கை பொருளாதார அபிவிருத்தித்துறை அமைச்சருமான பசில் ராஜபகஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகரகம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது அவர் இவ்வாறு  குறிப்பிட்டார்.