காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ப்பதை கண்டித்து ரயில் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம்!

kulithalai newskulithalai news2

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்ப்பதை கண்டித்து குளித்தலையில் இன்று (12/11/2013) ரயில் மறியல் மற்றும் கடையடைப்பு  போராட்டம் நடைபெற்றது.

இதில் குளித்தலை நகரமன்ற தலைவர் பல்லவிராஜா தலைமை தாங்கினார். குளித்தலை பெரிய பாலத்திலிருந்து ரயில்நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் ரயில் மறியலில் ஈடுபட்ட  சுமார் 60 பேரை ரயில் நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். மேலும் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகப்பு போடப்பட்டு இருந்தது.

 –பன்னீர்