காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பையை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக மொத்தம் 360 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.02.2026) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 82 கோடியே 9 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 35 கோடியே 02 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் 5 கோடியே 06 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மரபணு பிரிவுக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், 2025-ஆம் ஆண்டிற்கான மூன்று சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பைகளை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகளின் பயன்பாட்டிற்கென 27 கோடி ரூபாய் செலவில் 300 புதிய நான்கு சக்கர வாகனங்களையும், மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக 10 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் 60 புதிய வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கே.பி.சுகுமார்
