குவஹாத்தியில் இன்று நடைபெற்ற 2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சவுகான் உரையாற்றினார். செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், இந்த பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் எதிர்காலத்திற்கானது என்றும், நாட்டிற்கும் வடகிழக்கு பிராந்தியத்திற்கும் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் கூறினார்.
இந்த பட்ஜெட், ஒரு விசித் பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது என்றும் , 2047 ஆம் ஆண்டுக்குள் சுயசார்பு, அதிகாரம் பெற்ற மற்றும் வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கிறது என்றும் மத்திய அமைச்சர் வலியுறுத்தினார். பட்ஜெட் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமூக செழிப்பில் கவனம் செலுத்துகிறது என்றும், நன்மைகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சென்றடைவதை உறுதி செய்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
வடகிழக்கு பிராந்தியத்திற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த மத்திய அமைச்சர், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்திற்கு (MDoNER) ரூ. 6,812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய பட்ஜெட்டை விட ரூ. 897 கோடி அதிகமாகும் என்றும் தெரிவித்தார். இந்த மேம்படுத்தப்பட்ட ஒதுக்கீடு, பிராந்தியத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் மத்திய அரசின் முன்னுரிமையை தெளிவாகக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
அசாம் பற்றிப் பேசிய அவர் , 2026–27 நிதியாண்டில், வரிப் பகிர்வுக்காக ₹49,725 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார் . 2014 முதல், அசாம் வரிப் பகிர்வு மூலம் சுமார் ₹3.12 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுகாதார முயற்சிகளில் பயோஃபார்மா சக்தி (அறிவு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் சுகாதார முன்னேற்றத்திற்கான உத்தி) அடங்கும், இது ஐந்து ஆண்டுகளில் ₹10,000 கோடி ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது, இது உயிரியல் மற்றும் பயோசிமிலர்களில் உள்நாட்டு திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, NIPER குவஹாத்தி போன்ற ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் மேம்படுத்தப்படும் , இது பிராந்தியத்தில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறமையான மனிதவள மேம்பாட்டிற்கு பங்களிக்கும்.
pவிவசாயிகளின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டு விவசாய பட்ஜெட் ₹1,32,561 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மேலும் தெரிவித்தார். புதுமை மற்றும் அறிவியல் முன்னேற்றத்தை வலுப்படுத்த விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு ₹9,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலிவு விலையில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளைக் குறைப்பதற்கும், ₹1,70,944 கோடி உர மானியம் வழங்கப்பட்டுள்ளது.
திவாஹர்
