பிரதமர் திரு நரேந்திர மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட பாரம்பரிய வரவேற்பின் போது, ஜோர்டான் பிரதமர் டாக்டர் ஜாஃபர் ஹசன், பிரதமரை அன்புடன் வரவேற்றார்.
ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகள் பயணத்தில் இது முதல் கட்ட பயணமாகும். 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஜோர்டானுக்கு மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். இருநாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகால நிறைவை இப்பயணம் குறிக்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா
