குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (15.12.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரான், புருனே தாருசலாம் மற்றும் மிக்ரானேசியா நாடுகளின் தூதர்கள் வழங்கிய தங்களது பணி நியமன ஆணைகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசுத் தூதர் டாக்டர் முகமத் ஃபத்தாலி, புருனே தாருசலாம் தூதர் திருமதி சித்தி அர்னிஃபரிசா ஹாஜி முகமது ஜெய்னி, மிக்ரோனேசியா கூட்டாட்சித் தூதர் திரு ஜான் ஃபிரிட்ஸ் ஆகியோர் தங்களது பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
திவாஹர்
