இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது

ஆசிய பகுதியில் அமைந்த தீவு நாடான இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டு, 2 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து, சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகமும் தடைபட்டு உள்ளது.

இந்த நிலையில், இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்து உள்ளது. இந்தோனேசியாவில் நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் பொதுமக்கள் உள்ள பகுதிகளுக்கு மீட்பு குழுவினரால் சென்று சேர முடியவில்லை. இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இதில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் மத்திய தபனுலி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மற்ற பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாலங்கள் மற்றும் சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், மீட்பு பணிகளும் தடைபட்டு உள்ளன. மீட்பு பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply