விஜயவாடாவில் ஆயுர்வேத மருந்து உற்பத்தித் துறையில் ஆராய்ச்சி அடிப்படையிலான புதுமை கண்டுபிடிப்புகளை வலுப்படுத்துவதற்கான மாநாடு தொடக்கம்.

மருந்து உற்பத்தி மேம்பாடு, சுகாதார நலன், ஒருங்கி்ணைப்பு ஆகியவற்றில் அறிவியல் ரீதியான புதுமை கண்டுப்பிடிப்புகளின்  முன்முயற்சியின் இரண்டாவது தொகுப்பை ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம் விஜயவாடாவில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டை விஜயவாடா மண்டலத்தின் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து பிராந்திய ஆயுர்வேத ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் இந்தியாவின் ஆயுர்வேதா, சித்தா, மற்றும் யுனானி மருந்து ஒழுங்கு முறைகளின் பரிணாமம் குறித்த புத்தகம் மற்றும் மருந்துகளின் சரக்கு மேலாண்மை முறை இணையதளம் ஆகியவற்றை மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம் வெளியிட்டது. 

Leave a Reply