வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ), சீனாவிலிருந்து வந்த பட்டாசுகளை இந்தியாவிற்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யும் அதிநவீன கடத்தல் முயற்சியை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, நவா ஷேவா துறைமுகத்தில் சீனாவிலிருந்து, ஐசிடி அங்கலேஷ்வருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட 40 அடி கொள்கலனை டிஆர்ஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விரிவான பரிசோதனையில், முன்பக்கத்தில் ஒரு மேலோட்டமான ஆடை அடுக்கின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46,640 பட்டாசுகள் இருப்பது தெரியவந்தது. மொத்த சரக்கும் ரூ 4.82 கோடி மதிப்புடையது. இதுதொடர்பாக குஜராத்தின் வேரவலில் இருந்து அதன் பின்னணியில் இருந்த ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
இத்தகைய ஆபத்தான பொருட்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வது பொது பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, முக்கியமான துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் பரந்த கப்பல் மற்றும் தளவாட சங்கிலிக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய திட்டமிடப்பட்ட கடத்தல்களைக் கண்டறிந்து அகற்றுவதன் மூலம், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு சூழல் அமைப்பின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும் டிஆர்ஐ தனது பணியில் உறுதியாக உள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
