பிரதமர் நரேந்திர மோதியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு.

பிரதமர் திரு நரேந்திர மோடியை கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று சந்தித்து பேசினார்.

வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை வரவேற்ற பிரதமர், இந்தியா-கனடா இடையேயான இருதரப்பு கூட்டாண்மைக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு அவரது பயணம் பங்களிக்கும் என்று கூறியுள்ளார்.

இந்தாண்டு ஜூன் மாதத்தில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு தாம் கனடா சென்ற போது பிரதமர் திரு மார்க் கார்னேவுடனான சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று பிரதமர் நினைவுகூர்ந்தார்.

வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையேயான மேம்பட்ட ஒத்துழைப்பின் சிறப்பு குறித்து பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு மார்க் கார்னேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், தங்களுடைய எதிர்வரும் சந்திப்புகளை தாம் எதிர்நோக்கியிருப்பதாக கூறினார்.

Leave a Reply