தேசிய மக்கள் தொடர்புக்கான இந்தியக் கடற்படை கார் பேரணியை கடற்படைத் தளபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியக் குடிமக்களுடன் ஆழமான உறவுகளை வளர்ப்பதற்கான இந்தியக் கடற்படையின் உறுதிப்பாட்டை நிரூபிக்கும் வகையில் இந்தியக் கடற்படை கார் பேரணியைக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி 2025 செப்டம்பர் 13 அன்று புதுதில்லியில் உள்ள வருணிகா கடற்படை கலையரங்கிலிருந்து முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு, கடல்சார் படைகளுக்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கடற்படையின் தொலைதூர முயற்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை நலன் மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட 34 பங்கேற்பாளர்களைக் கொண்ட இந்தப் பேரணி, எட்டு நாட்களில் ஆக்ரா, லக்னோ, வாரணாசி, கான்பூர் நகரங்களைக் கடந்து 1700 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாக இருக்கும். உள்ளூர் மக்களுடன் அதிக ஈடுபாட்டை ஏற்படுத்தவும், பிராந்தியத்தின் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை மதிக்கவும் இந்த இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேரணி, இந்தியக் கடற்படையின் தேசிய ஒருங்கிணைப்புக்கான அர்ப்பணிப்புக்கும், கடற்கரைக்கு அப்பால் உள்ள குடிமக்களுடன் இணைவதற்கான அதன் முன்முயற்சிகளுக்கும் ஒரு சான்றாகத் திகழ்கிறது. கடற்படை ஒரு கடல்சார் படையாக மட்டுமின்றி, தேச ஒற்றுமை மற்றும் பெருமையின் தூணாகவும் அதன் பங்கினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply