1. லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் பிரிகேடியர் (டாக்டர்) பி.டி. மிஸ்ரா (ஓய்வு) ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
2. பின்வரும் ஆளுநர் / துணை நிலை ஆளுநர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்:-
(i) ஹரியானா மாநில ஆளுநராக பேராசிரியர் ஆஷிம் குமார் கோஷ்
நியமிக்கப்பட்டுள்ளார்.
(ii) கோவா மாநில ஆளுநராக திரு பூசாபதி அசோக் கஜபதி ராஜு
நியமிக்கப்பட்டுள்ளார்.
(iii) லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக திரு கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
3. மேற்கண்ட ஆளுநர் / துணை நிலை ஆளுநர்களின் நியமனங்கள் அந்தந்த அலுவலகங்களில் அவரவர்கள் பொறுப்பேற்கும் தேதிகளிலிருந்து அமலுக்கு வரும்.
திவாஹர்
