நீடித்த வளர்ச்சி மற்றும் தூய்மையான நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்தும் வகையில் தில்லி அரசின் முன்முயற்சியின் கீழ், பிரதமர் திரு நரேந்திர மோடி மின்சாரப் பேருந்து போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார்.
மின்சார பேருந்து போக்குவரத்து தூய்மை மற்றும் பசுமையான தில்லியை உருவாக்க உதவிடும் என்று பிரதமர் கூறினார். இந்த நடவடிக்கை தில்லியில் உள்ள மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“தூய்மை மற்றும் பசுமையான தில்லியை உருவாக்குதல்!”
நீடித்த வளர்ச்சி மற்றும் தூய்மையான நகர்ப்புற இயக்கத்தை மேம்படுத்தும் வகையில் தில்லி அரசின் முன்முயற்சியின் கீழ், மின்சாரப் பேருந்து போக்குவரத்து சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தேன் . மேலும் இந்தப் போக்குவரத்து சேவை அப்பகுதி மக்களின் எளிதான வாழ்க்கைக்கு உதவும் “.
திவாஹர்
