பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லத் தவறி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு உணர்ச்சிவசப்பட்டு பேசிய மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் பேட்டியை ட்விட்டர் பதிவாக ஏ.என்.ஐ வெளியிட்டிருந்தது. அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அவரை ஊக்கப்படுத்தினார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“பூஜா, உங்கள் பதக்கம் கொண்டாடப்பட வேண்டியது, மன்னிப்பு கோரத் தகுந்ததல்ல. உங்களது வாழ்க்கைப் பயணம் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது, உங்கள் வெற்றி எங்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது. உங்கள் எதிர்காலம் மிகச் சிறப்பாக உள்ளது… தொடர்ந்து சாதனை புரியுங்கள்.”
திவாஹர்
