‘உள்ளாட்சித் தகவல்’ செய்தி எதிரொலி : தூத்துக்குடி மேலூர் இரயில் நிலையத்தை தூய்மை செய்யும் பணி இன்று தொடங்கியது!

IMG_20141028_104008 IMG_20141028_103638 IMG_20141028_103959தூத்துக்குடி மேலூர் இரயில் நிலைய சுகாதாரச் சீர்கேடு குறித்தும், குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பதால் குடிநீர் மாசு அடைந்துள்ளது குறித்தும். ‘குடிநீருடன் சாக்கடை நீர் கலக்கும் கொடுமை : தூத்துக்குடி மேலூர் இரயில் நிலையம் தூய்மை செய்யப்படுமா?’ என்ற தலைப்பில் 27.10.2014 அன்று மதியம் 2.10 மணிக்கு நமது ‘உள்ளாட்சித் தகவல்’ ஊடகத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இதை அறிந்த இரயில்வே நிர்வாகம், தூத்துக்குடி மேலூர் இரயில் நிலையத்தை தூய்மை செய்யும் பணியை இன்று தொடங்கியது.

-பி.கணேசன் @ இசக்கி.