சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளுக்கு ரூ.1000 அபராதம்!

image 03(1)திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சாலைகளில் நூற்றுக்கணக்கான மாடுகள் சுற்றித்திரிகின்றன.

இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் மாடுகள் சண்டை போட்டு வாகனங்கள் மீதும், பொது மக்கள் மீதும் மோதி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன.

இவற்றை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து செங்கத்தில் சுற்றித்திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பிடித்து அவர்களிடத்தில் கட்டிவைக்க வேண்டும். இல்லையென்றால், பேரூராட்சி மூலம் அவைகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

-செங்கம்.மா.சரவணக்குமார்.