ரஷ்யாவின் போர்க்கப்பல் ஒன்று இன்று (23.10.2014) அதிகாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
மொஸ்க்வா எனும் பெயருடைய இந்த போர்க்கப்பல் 187 மீட்டர் நீளமும், 9,270 டன் எடையும் கொண்டதாகும். இதில் 514 ரஷ்ய கடற்படை வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
கொழும்பு கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படை வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவுடன், ரஷ்ய கப்பலின் கட்டளைத்தளபதிகள் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின் போது இலங்கை கடற்படை தளபதிவைஸ் அட்மிரல் ஜயந்த பெரேரா, ரஷ்ய கடற்படை அதிகாரிகளுக்கு நினைவு பரிசும் வழங்கியுள்ளார்.
இந்த போர்க்கப்பல் 24.10.2014 மாலை கொழும்புத் துறைமுகத்திலிருந்து மீண்டும் புறப்படும் என்று தெரிகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in