இசைப்பிரியா இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்படவில்லை! இலங்கை இராணுவம் பாலியல் கொடுமை செய்து தான் சுட்டு கொன்றிருக்கிறது! இதோ அதற்கானப் புகைப்பட ஆதாரம்!

இசைப்பிரியா

இசைப்பிரியா

isaipriya sl

இலங்கை இராணுவத்தினரிடம் இசைப்பிரியா

இலங்கை இராணுவத்தினரிடம் இசைப்பிரியா

சித்ரவதை முகாமில் இசைப்பிரியா

சித்ரவதை முகாமில் இசைப்பிரியா

சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா

சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட  இசைப்பிரியா

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா, இறுதிக்கட்ட போரின் போது கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்து வந்தது.

இசைப்பிரியா, இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர், கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும், இலங்கை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும், அதற்கான ஆதாரங்களை சணல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.

அதனை இலங்கை இராணுவம் தொடர்ந்து மறுத்து வந்தது. போலியான ஆவணங்களைக் கொண்டு, இலங்கை இராணுவத்தை குற்றப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் கூறி வந்தது.

இந்நிலையில் இசைப்பிரியா இராணுவ முகாமுக்குள் உயிருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் தான், இசைப்பிரியாவை இலங்கை இராணுவம் பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்துள்ளது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.