இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு!- 25 பேர் பலி; 42 நபர்கள் காணாமல் போய் உள்ளனர்.

sl flood sl flood1 sl flood2 sl flood3 sl flood4 sl flood5

இலங்கையில் பெய்த கனமழையின் காரணமாகவும், சீரற்ற கால நிலையாலும் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இலங்கை தெற்கு மாகாணத்தில் 13 கடற்படை நிவாரண குழுக்களும், மேற்கு மாகாணத்தில் 18 கடற்படை நிவாரண குழுக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

31 டிங்கி படகுகளுடன், 197 கடற்படை வீரர்கள் கம்புருபிட்டிய, நெலுவ, இமதுவ, வந்துரம்ப பிட்டெபத்தரஅக்குரஸ்ஸ, மாத்தறை, தெய்யந்தர, ஹெனகடுவ, ஹங்காமா, பாதுக்கஹன்வெல்ல, மத்துகம, புவக்பிட்டிய, புலத்சிங்கல, பதுரலிய, கலவான, உடுகம மற்றும் பிடிகல ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுவரை கிட்டத்தட்ட 357 பாதிக்கபட்ட நபர்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். பதுரலிய பகுதியில் 200- க்கும் மேற்ப்பட்டவர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் வேயன்கல்ல, குடலிகம பகுதியில் 64 நபர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 2,811 குடும்பங்களில் 7,856 நபர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 25 நபர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 42 நபர்கள் காணாமல் போய் உள்ளனர்.

அவசரக்கால மீட்பு மற்றும் உதவிகளுக்கு கீழ்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரத் தொலைத் தொடர்பு: 117

பொது அழைப்புகள்: 011 2136136

அவசர செயல்பாடுகள் மையம்: 011 2670002,              011 2136222

தொலைநகல்: 011 2670079

மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட செயலாளர்களின் தொலைபேசி எண்கள்: 

இரத்தினபுரி மாவட்டம்: 0452222235 / 0714423760

களுத்துறை மாவட்டம்: 034 2222235 / 0716814813

காலி மாவட்டம்: 0912234235 / 0714415377

மாத்தறை மாவட்டம்: 0412222235 / 0776864397

அம்பாந்தோட்டை மாவட்டம்: 0472256235 / 0714441612

கொழும்பு மாவட்டம்: 0112369134 / 0773184910

கம்பஹா மாவட்டம்: 0332222235 / 0773273507

கேகாலை மாவட்டம்: 0352222235 / 0773633293

 -என்.வசந்த ராகவன்.