திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில் அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதலாம் ஆண்டு முதுகலை சமூகப்பணி மாணவர்கள் சார்பில், ஆதரவற்றோருக்கு உதவும் வகையில் முதலாம் ஆண்டு முதுகலை சமூகப்பணி மாணவி ஸ்வேதா மாதவன் ஒருங்கிணைப்பில், திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள அன்னை ஆசிரமத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டி.ரஞ்சித் ராஜ்குமார் கலந்து கொண்டார். அன்னை ஆசிரமத்தின் மேற்பார்வையாளர் எஸ்.கண்ணம்மாள், மேலாளர் ஜான் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply