ஏற்காடு வனப்பகுதிகளில் தீ! – சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதி மற்றும் வினாயகம்பட்டி, செங்கரடு, எள்ளுகுண்டு, குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இரு நாட்களாக  தொடர்ந்து ஆங்காங்கே காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் இப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தினார்.

-நவீன் குமார்.

Leave a Reply