துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கலந்துகொண்டார்.

மத்திய அரசு பாதுகாப்பு துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்தும், ஊழியர்களின் பென்சன் உரிமையை வென்றெடுக்க வலியுறுத்தியும், 4 லட்சம் பாதுகாப்புதுறை தொழிலாளர்கள் ஜனவரி 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 3 நாள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஹெச்ஏபிபி தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்தி வரும் 2-வது நாள் போராட்டத்தில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு தமது ஆதரவை தெரிவித்தார்.

ஆர்.சிராசுதீன்.

Leave a Reply