திருச்சி, வேங்கூர் பூசைப்படித்துறை அருகே காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் பிணம்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்சி- கல்லணை சாலை, வேங்கூர் பூசைப்படித்துறை அருகே, காவிரி ஆற்றில் சடலம் கிடப்பதாக, இன்று காலை 9 மணியளவில், திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார், காவிரி ஆற்றில் சடலமாக கிடந்த ஆண் பிணத்தை மீட்டு, ஆம்புலன்சில் ஏற்றி பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட ஆண், யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்?  எப்படி இறந்தார்? என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இதுக்குறித்து திருவெறும்பூர் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply