ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார்!.

 

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருச்சி, ஸ்ரீரங்கம் ஸ்ரீ அரங்கநாதர் கோவில் பரமபத வாசல் வழியாக நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். ஏகாதிசி உற்சவ நாளான இன்று அதிகாலை 5.30 மணிக்கு, நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை அலங்காரத்தில், சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால், பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் ஸ்ரீரங்கம் முழுவதும் விரிவான  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply