தமிழகத்தில் வடமாவட்டங்களில் மிதமான முதல் பலத்த மழை பெய்யும்!-வானிலை அறிக்கை முழு விபரம்.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. ‘பெய்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், சென்னையில் இருந்து தென்கிழக்காக 590 கி.மீ.-ல் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்காக நகர்ந்து, ஆந்திராவில் காக்கிநாடாவிற்கும், மசூலிபட்டிணத்திற்கும் இடையே டிசம்பர் 17-ந்தேதி மதியம் கரையை கடக்கும். அப்போது தமிழகத்தில் வடமாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான முதல் பலத்த மழை பெய்யுமென, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply