குண்டு துளைக்காத ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகளை தயாரித்து வரும் தனியார் நிறுவனத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயநேரியில் ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்திடம், இராணுவத்திற்கு தேவையான குண்டு துளைக்காத ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட் தயாரிப்பு பொருட்களை, மத்திய பாதுகாப்புத்துறை தர ஆய்வு குழுவினர் கொள்முதல் செய்வது குறித்து ஆய்வு செய்தனர்.

மத்திய பாதுகாப்பு துறை சார்பில், பாதுகாப்புத் துறைக்கு தேவையானப் பொருட்களை உள்நாட்டு நிறுவனங்கள் உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்து அவர்களிடமிருந்து பாதுகாப்புத் துறைக்கு கொள்முதல் செய்யப்படுமென்று, அண்மையில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தராமன் அறிவித்திருந்தார்.

அதன் ஒரு பகுதியாக, திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள தேவராய நேரியில் உள்ள கான்குரோடு ஹெல்மெட் நிறுவனம் பெல், டாட்டா மற்றும் தீயணைப்பு முற்றும் காவல்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கு தேவையான ஹெல்மெட்டுகளை தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் இராணுவத்திற்கு தேவையான குண்டு துளைக்காத ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகளை தயாரித்து மத்திய பாதுகாப்புத் துறைக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இந்நிறுவனம் தயாரித்த ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட் மாதிரிகளை மத்திய பாதுகாப்புத்துறை தர ஆய்வுகுழுவைச் சேர்ந்த 5 பேர் பேனர்ஜி என்பவர் தலைமையில் டிசம்பர் 10-தேதி நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

ஆய்வில் இங்கு தயாரிக்கப்படும் புல்லட்புருப் ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகளை 9 mm குண்டுகளால் சுட்டுப்பார்த்து அது துளைக்காமல் இருக்க வேண்டும். மேலும், ஆய்வு குழுவினர் ஆலோசனைப்படி ஹெல்மெட் மற்றும் ஜாக்கெட்டுகள் தயாரிக்கப்படும். அதற்கு அவர்கள் அனுமதி தரவேண்டும் என்கிறார் கான்குரோடு பொதுமேலாளர் சௌரிராஜன்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply