ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருச்சி திருவானைக்காவலில் முகாமிட்டுள்ள காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திரர்!

டிசம்பர் 12-ந்தேதி திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் சகல கோபுரங்கள் மற்றும் சுவாமி அம்பாள் விமானங்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி, திருவானைக்காவலில் முகாமிட்டு கும்பாபிஷேக திருப்ணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, டிசம்பர் 06-ந்தேதி முதல் திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. யாகசாலை பூஜைகளும், கலை நிகழ்ச்சிகளும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நாள்தோறும் நடைப்பெற்று வருகின்றன.

காவல்துறை மற்றும் தீ அணைப்பு மீட்புத் துறை சார்பில் விரிவானப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply