காவலர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி!

மதுரை மாநகர காவலர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி முகாமை மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் சண்முகராஜேஸ்வரன், மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) மகேஷ் மற்றும் சமூக ஆர்வலர் ஷர்மிளா ஆகியோர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.

இப்பயிற்சி வகுப்புகளை சிறப்பு நுண்ணிறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் நடத்தினார். இப்பயிற்சி வகுப்பில் 40 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

-எஸ்.திவ்யா.

Leave a Reply