ஆந்திராவில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆறுதல்!-மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்.

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தும், பாதுகாப்பு மற்றும் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர்.

புயல், மழையால் சேதமடைந்த சாலை, மின் கம்பங்களை சீர் செய்யும் பணி போர்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது.

புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு  ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply