திருவெறும்பூரில் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது !

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கக்கன் காலனியைச் சேர்ந்த நொக்கு வீரன் என்பவர், கஞ்சா விற்றதாக திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது சம்மந்தமாக நொக்குவீரன் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில், திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply