திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசாமணி உத்தரவின்படி, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம். காவிரி ஆற்று கரையோரக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “மணல் கடத்தல் தடுப்பு விழிப்பணர்வு பேரணி” திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன் தலைமையில், ‘நமது மண், நமது மானம், நமது உரிமை’ என்ற தலைப்பில், கிளியூர் கிராமத்தில் இருந்து தொடங்கி, பனையகுறிச்சி கிராமம் வரை இன்று நடைப்பெற்றது.
இதில் திருவெறும்பூர் வட்டாட்சியர் அண்ணாதுரை, திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் வருவாய்துறை, காவல்துறை, கனிம வளத்துறை வட்டார மற்றும் வளர்ச்சி அலுவலர்கள், ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர். தீயணைப்பு துறையினர், வட்டார மருத்துவ அலுவலர்கள், கல்வித்துறை மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.
அது என்னப்பா பின்புலத்தில் ஒரு டிராக்ட்டர் ஓடுற சத்தம்…. ஒரு அரசு அதிகாரி ஒரு முக்கியமான விசயத்தைப்பற்றி பொது இடத்தில் ஒரு பேரணி நடத்தி அதுபற்றி ஒரு பேட்டி கொடுக்கும் போது கொஞ்சம் கூட சபை நாகரீகம் தெரியாமல்… இனிமேல் இது போன்ற தவறுகளை செய்ய வேண்டாம்…