தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல்.

K. Periaiah., IPS.

கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையராக இருந்த பெரியய்யா, மேற்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமலாக்கத்துறை ஆணையராக இருந்த சுமித் சரண், கோயமுத்தூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரமோத் குமார் மண்டபம் அகதிகள் முகாம் ஐஜியாகவும், சாரங்கன் காவல்துறை பயிற்சி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தமிழக உள்துறை கூடுதல் முதன்மை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply