கடன் தொல்லை காரணமாக அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் கொத்தனார் தூக்கில் தொங்கினார்!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்குமலை, பெரியார் தெருவை சேர்ந்தவர் சக்திவேல், இவர் கொத்தனார் வேலைப்பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனலெட்சுமி என்கிற மனைவியும், இந்து என்கிற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், சக்திவேலுக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. அதனால் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியில் போனவர் மறுபடியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் துவாக்குடி அண்ணாவளைவுப் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில்,ஒருவர் தூக்கில் தொங்குவதாக பாலிடெக்னிக் கல்லூரி வாட்சுமேன் பார்த்து விட்டு துவாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த துவாக்குடி போலீசார் தூக்கில் தொங்கிய சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆர்.சிராசுதீன்.

Leave a Reply