ஏற்காட்டில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று 6 சிலைகள் ஏற்காடு படகு இல்ல ஏரியில் கரைக்கப்பட்டன. இதற்கிடையில் இன்று மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஏற்காட்டில் கனமழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏற்காடு டவுன் செல்வ விநாயகர் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை சிலை அமைப்பாளர்கள் மழையில் நனைந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து ஏற்காடு படகு இல்ல ஏரியில் கரைத்தனர்.

-நவின்குமார்.

Leave a Reply