திண்டுக்கல் அருகே மினி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி, பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயம்.

திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராயன் கோட்டையிலிருந்து இன்று காலை திண்டுக்கல் நோக்கி வந்த தனியாருக்கு சொந்தமான மினி பேருந்து ஒன்று, கொட்டப்பட்டி கிராமம் அருகே நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஒருவர் பலியானார். பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுக்குறித்து திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

-அழகுராஜா.

Leave a Reply