திருவாரூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரியும் மாடுகள்!- பயந்து ஓடும் பயணிகள் !-திருவாரூர் நகராட்சியின் அவலநிலை.

வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் பேருந்து நிலையத்தில், இப்போது எங்கு பார்த்தாலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதைப்பார்த்து அங்கு நிற்கும் பயணிகள் பயந்து ஓடுகின்றனர். மாடுகளால் பேருந்து ஓட்டுநர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிக்கும் இடங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படாததால் துற்நாற்றம் வீசுகிறது.

துப்புரவுப் பணி முறையாக மேற்கொள்ளப்படாதக் காரணத்தால், திருவாரூர் நகரம் முழுவதும் சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளது.

இதுதான் தூய்மை இந்தியா திட்டத்தின் லட்சணமா?

-கே.ஏ.அண்ணாமலை.

Leave a Reply