திருச்சி அரியமங்கலம் லெட்சுமிபுரத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை முயற்சி!

திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெட்சுமிபுரம் 2-வது தெருவில், 7-வது வட்டக்கழக அதிமுக மகளிர் அணிச் செயலாளர் காவேரி ராஜாராம், தன் கணவர் ராஜாராமனோடு பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று (19.07.2018) இரவு காட்டூர் அருகே உள்ள மலையப்பன் நகரில் குடியிருந்து வரும், தன் மகன் பாண்டியன் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கிவிட்டனர்.

இந்நிலையில், நேற்று இரவு அரியமங்கலம் லெட்சுமிபுரம் 2-வது தெருவில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இன்று காலை வீட்டிற்கு வந்துப் பார்த்தபோது, வீட்டின் பூட்டு, கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட ராஜாராம் அதிர்ச்சியடைந்தார். இதுக்குறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அரியமங்கலம் காவல் நிலைய போலிசார், இதுக்குறித்து விசாரணை செய்து வருகின்றனர். 

திருச்சி -சென்னை, திருச்சி-தஞ்சை ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் இந்த லெட்சுமிபுரம் இருப்பதால், அடிக்கடி இதுப்போன்ற கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் நேரடிப் பார்வையில் தனிப்படை அமைத்து கண்காணித்தால், குற்றச் சம்பவங்களை நிச்சயம் தடுக்கமுடியும்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply