30-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய நாமக்கல் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கணவன் மனைவி திருச்சியில் கைது!

நாமக்கல் மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கெட்டியான் பாண்டி மற்றும் அவரது மனைவி ரூபா ஆகிய இருவரும், திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் புகுந்து, அவர்கள் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் அனைத்தையும் திருடிக் கொண்டு தப்பிய வழக்கில், திருவெறும்பூர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் திருச்சி, நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது, போலீஸ் விசாரணையில் தற்போது தெரிய வந்துள்ளது.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply