போலீசாருக்கு வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழப்பு குறித்து பயிற்சி!

சேலம் மாவட்டம், ஏற்காடு எல்லைக்குட்பட்ட போலீசாருக்கு வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் நடைப்பெற்ற பயிற்சியில் சேலம் மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் எட்வின் போலீசாருக்கு பயிற்சியளித்தார்.

அவர் “ வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டாலோ, தகவல் கிடைத்தாலோ முதலில் வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார் பாதுகாப்பு பணியில் மட்டும் ஈடுபடாமல், சோதனைகளில் ஈடுபட்டு வெடி விபத்துகள் ஏற்படாமல் இருக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்கினார்.

– நவீன் குமார்.

 

Leave a Reply