திருச்சி, திருவெறும்பூர், எழில் நகரில் பெண்ணின் கழுத்தை நெரித்து 18 பவுன் நகை கொள்ளை!-திருவெறும்பூர் பகுதியில் தொடரும் குற்றச் சம்பவங்கள்..!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், எழில் நகரில் பெண்ணின் கழுத்தை நெரித்து 18 பவுன் நகையும், மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையையும் திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முருகன் என்பவரது மனைவி வாணி, அவர் கழுத்தை நெரித்து 18 பவுன் நகையும் மற்றும் டென்சிலின் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், உயர் ரக கேமரா ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து திருவெறும்பூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவெறும்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடிப் பார்வையில், தனிப்படை அமைத்து கண்காணித்தால் மட்டுமே, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply