ஏற்காட்டில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு சிறப்பு முகாம் நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆம் தேதி முதல் இன்று வரை தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு சிறப்பு முகாம் நடைப்பெற்றது. மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஏற்காட்டில் பல்வேறு பள்ளிகளில் இம்முகாம் நடைப்பெற்றது. அது மட்டுமின்றி அங்கன்வாடி பணியாளர்களை கொண்டு ஏற்காட்டின் அனைத்து கிராமங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு மற்றும் முகாம்களில் ஏற்காட்டை சேர்ந்த 50 வயது ஆண் ஒருவருக்கு பரவக்கூடிய தொழுநோயும், 2 மாணவர்களுக்கு பரவா தொழுநோயும் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஆலோசணை மற்றும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதன் இரண்டாம் கட்ட முகாம் அடுத்த மாதம் 2 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

– நவீன்குமார்.

 

Leave a Reply