ஓய்வு பெற்ற பெல் ஊழியர்களின் வீடுகளில் கொள்ளை!-திருவெறும்பூர் பகுதிகளில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள்…!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மலைக்கோவில், தென்றல் நகரில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர்கள் ஆறுமுகம், பொன்னுச்சாமி ஆகியோர் வீடுகளின் பூட்டை உடைத்து, கொள்ளையர்கள் தங்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். இதுக்குறித்து திருவெறும்பூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருவெறும்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடிப் பார்வையில், தனிப்படை அமைத்து கண்காணித்தால் மட்டுமே, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply