நிதிஷ் குமாரை நேரில் சந்தித்த அமித்ஷா!- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி தொடருமா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று பீகார் வந்தார். பாட்னா விமான நிலையத்தில் அவருக்கு பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமாரை நேரில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், நித்திஷ் எங்கள் கூட்டணியில் தான் இன்னமும் தொடர்கிறார். நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் இணைந்தே சந்திப்போம். எங்களுக்குள் மோதல் வரும் என்று எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஆனால், பாஜக – ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் தொடருமா? என்பது இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது, தேர்தல் தேதி வெளியான பிறகுதான் உண்மை நிலமை தெரியவரும்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply